
17 ஆண்டுகளுக்குப் பின்பு தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பு (SAFF) போட்டியை நடத்தும் உரிமை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் இடம்பெற்ற தெற்காசிய கால்பந்து கூட்டமைப்பின் நிர்வாகக் குழு கூட்டத்தில் குறித்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
கடைசியாக 2008ஆம் ஆண்டு தெற்காசிய கால்பந்து போட்டி இலங்கையில் நடைபெற்றது. அதன் பின்பு 17 ஆண்டுகள் கழித்து மீண்டும் இலங்கையில் இந்த போட்டியை நடாத்த உரிமை வழங்கப்பட்டுள்ளது.
1995 ஆம் ஆண்டு முதல் கடந்த 30 ஆண்டுகளில் இலங்கை கால்பந்து அணியால் தெற்காசிய கால்பந்து சாம்பியன்களாக மாற முடியவில்லை.
இந்த ஆண்டு தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப்பில் இந்தியா, மாலைதீவு, பாகிஸ்தான், பூட்டான், நேபாளம், பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் பங்கேற்க உள்ளன.