தனியார் பேருந்து – லொறி விபத்து; பாடசாலை மாணவர்கள் உட்பட 15 பேர் வைத்தியசாலையில்!

தனியார் பேருந்தும் சிறிய லொறியும் நேருக்கு நேர் மோதி ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட சுமார் 15 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

ஹொரணை நோக்கிச் சென்று கொண்டிருந்த பேருந்து, இங்கிரிய நோக்கிச் சென்று கொண்டிருந்த சிறிய லொறி மீது மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்து ஹொரணை – இரத்தினபுரி வீதியில் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது.

காயமடைந்தவர்களில் மாணவர்கள் உட்பட லொறி சாரதி மற்றும் உதவியாளரும் உள்ளடங்குவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் இங்கிரிய மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், ஆபத்தான நிலையில் இருந்த லொறி உதவியாளர் உட்பட பல பாடசாலை மாணவர்கள் சிலர் மேலதிக சிகிச்சைக்காக ஹொரணை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இங்கிரிய பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply