பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொள்ளத் தீர்மானம்

நாட்டில் தற்சமயம் கொரோனா தொற்று குறைவடைந்து காணப்படும் நிலையில், குறித்த பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகளை வழமை போல் மேற்கொள்ளத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது

சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஆலோசனைகள் மற்றும் சமூக இடைவெளியைப் பேணுவதற்கான வசதிகள் காணப்படும் பட்சத்தில் 200க்கும் அதிகமான மாணவர்களைக் கொண்ட பாடசாலை களிலும் அனைத்து வகுப்புக்களுக்கும் கல்வி நடடிக்கையை ஆரம்பிக்க முடியும் என்றும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக விடுமுறை வழங்கப்பட்ட அரசு பாடசாலைகள் மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளையும் மீண்டும் திறக்க கல்வி அமைச்சகம் தீர்மானித்துள்ளது.

அதன்படி, பாடசாலைகளில் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 200க்கும் அதிகமாக இருந்தால், அத்தகைய பாடசாலைகளில் சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும், மேலும் மாணவர்களின் இடைவெளியையும் தனிப்பட்ட தூரத்தையும் பராமரிக்க முடியும் என்றால் அனைத்து வகுப்பு மாணவர்களையும் பாடசாலைக்கு அழைத்து ஆசிரியர்களால் மாணவர்களுக்கும் கற்றல் நடவடிக்கையை மேற்கொள்ள முடியும்.

இந்த செயல்முறையை மீண்டும் ஆரம்பிக்க மாகாண தலைமைச் செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர், வலய கல்வி பணிப்பாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் அதிபர்களுக்குக் கல்வி அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir