
ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய பிரச்சினைகளைத் தீர்க்க அரசு உடனடியாக தலையிடும் என தொழில் பிரதி அமைச்சர் மகிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
ஓய்வூதியர்கள் எதிர்கொள்ளும் ஊதிய முரண்பாடுகள் குறித்து நிதி அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந்த கலந்துரையாடலின் போது,
2015 முதல் ஓய்வூதியம் பறிக்கப்பட்டமை மற்றும் 1997 ஆம் ஆண்டு பி.சி.பெரேரா ஆணைக்குழுவின் பரிந்துரைகள் மூலம் ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை அதிபர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்த பிரச்சினைகள் தொடர்பாக மேலும் கலந்துரையாடுவதற்கு, இன்று (30) ஒரு சந்திப்பை நடாத்துவதற்கு இணக்கம் காட்டப்பட்டுள்ளது.
இந்த சந்திப்பில் அரச நிர்வாக அமைச்சு, நிதி அமைச்சு மற்றும் ஓய்வூதிய திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.