யாழில் இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் மே தினப் பேரணி!

யாழில் மே தினத்தை முன்னிட்டு இலங்கை ஆசிரியர் சங்கத்தின் ஏற்பாட்டில் பொது அமைப்புக்கள் இணைந்து மே தினப் பேரணி ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

இந்த பேரணியானது யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் ஆரம்பமாகி, யாழ் நகரின் பிரதான சாலைகளூடாக சென்று யாழ் பொது நூலகம் முன்பாக ஒன்று கூடவுள்ளது.

குறித்த பேரணியில்,
தமிழர்களின் சுயநிர்ணய உரிமையை அங்கிகரி!
அதிபர், ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்களின் சம்பள முரண்பாட்டை உடணடியாக நீக்கு,
மலையகத் தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தை வழங்கு,
கடற்றொழிலாளர் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கு தீர்வை வழங்கு,
விவசாயிகள் எதிர்நோக்கும் உற்பத்தி, சந்தைப்படுத்தல் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கு
உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து பேரணி நடாத்தப்பட்டது.

இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் தலைமையில் ஆரம்பமான இப் பேரணியில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள், யாழ் பல்கலைக் கழக ஊழியர் சங்க பிரதிநிதிகள், பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply