தனியாக இருந்த பெண்கள் மீது அத்துமீற முயன்ற யாழ் நபர் நையப்புடைப்பு!

மாங்குளம் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நபர் ஒருவர் அத்துமீறி நுழைந்து அங்கிருந்த பெண்கள் மீது பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித்த வேளையில் அயலவர்களால் நையப்புடைக்கப்பட்டு பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று (02)  இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

பெண்கள் வீட்டில் தனியாக இருந்த வேளையில் திடீரென வீட்டிற்குள் நுழைந்த அறிமுகம் இல்லாத நபர் பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ள முயற்சித் நிலையில் அந்த பெண்கள் சத்தமிட்டுள்ளனர்.

அவர்களின் சத்தம் கேட்டு அயலவர்கள் ஓடிச்சென்று சந்தேக நபரை மடக்கி பிடித்து கட்டியுள்ளனர்.

சந்தேக நபரின் உடைமையில் கத்திகளும் காணப்பட்டுள்ளன.

இதனையடுத்து சம்பவம் தொடர்பில் மாங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில், சம்பவம் இடத்துக்கு விரைந்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.

ஆண்கள் யாரும் இல்லாத நிலையில் நிகழ்ந்த இந்த வன்முறையால் பாதிக்கப்பட்டு காயமடைந்த பெண்கள் (மனைவியின் தாய் மற்றும் தங்கை இருவர் ) மாங்குளம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

கைதான சந்தேக நபர் யாழ்ப்பாணம் பருத்தித்துறை பகுதியை சேர்ந்தவர் என்று விசாரணையின் போது கூறியுள்ளார் .

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply