பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண்!

பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா களனி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இன்றைய தினம் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் கூறப்பட்டுள்ளது.

அத்துடன், இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக துணைவேந்தராக நியமிக்கப்பட்ட முதல் பெண் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: kalaikkathir