மொனராகலை – ஹுலந்தாவ பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் மதுபானம் கொண்டு சென்ற மாணவர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சர்வதேச சிறுவர்கள் தின கொண்டாட்டம் நேற்று (01) கொண்டாடப்பட்ட நிலையில், பாடசாலை வளாகத்தில் குறித்த மாணவர்கள் மது அருந்திய வண்ணம் இருந்துள்ளனர்.
இவ்வாறு பாடசாலை வளாகத்தில் மது அருந்திக்கொண்டிருந்த வேளையிலேயே குறித்த மாணவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
