பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (09) காலை ஆஜராகியுள்ளார்.
சர்ச்சைக்குரிய 323 கொள்கலன்கள் தொடர்பாக முன்னெடுக்கப்படும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்கும் பொருட்டு அவர் ஆஜரானதாக தெரிவிக்கப்படுகின்றது.
