சர்வதேச மன நல தினம் (உலக மனநல நாள்) ஆண்டுதோறும் அக்டோபர் 10 அன்று கொண்டாடப்படுகிறது.
இந்த தினத்தை முன்னிட்டு செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் ஏற்பாட்டில் இன்று நடைபவனி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலையின் வைத்தியப்பொறுப்பதிகாரி வைத்தியர் சி. ஜீவிதா தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த போராட்டத்தின் போது, பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திய வண்ணம் நடைபவனியை முன்னெடுத்திருந்தனர்.
