இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்!

வட மாகாணத்தில் இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளது.

குறித்த போராட்டம் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தின் முன்பாக இடம்பெற்றிருந்தது.

வட மாகாண கல்வித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட இடமாற்றங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் உப தலைவர் தீபன் திலீசன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

போராட்டத்தின் போது,
“அடிமைச் சேவகம் புரியம் தொழிலாக ஆசிரியத்தை மாற்றாதே!”, “நிறுத்து நிறுத்து அரசியல் தலையீட்டை நிறுத்து”
வடமாகாண கல்வி அமைச்சே உனது மோசடிகளால் குடும்பங்களை சிதைக்காதே”
முதலான பல்வேறு வாசகங்களை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply