புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்க 9 பேர் கொண்ட நிபுணர் குழு

புதிய அரசியலமைப்பு வரைவை உருவாக்குவதற்காக ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா தலைமையிலான 9 பேர் அடங்கிய குழு அமைச்சரவையினால் நியமிக்கப்பட்டுள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் சற்று முன்னர் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடக சந்திப்பில், அமைச்சரவை இணை பேச்சாளரான, அமைச்சர் உதய கம்மன்பில இதனைத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, மனோஹர டி சில்வா, சஞ்சீவ ஜயவர்தன, சமன் ரத்வத்த, பேராசிரியர் ஜீ.எச்.பீரிஸ், கலாநிதி ஏ. சர்வேஸ்வரன், பேராசிரியர் நசீமா கமுறுடீன், பேராசிரியர் வசந்த செனவிரத்ன ஆகியோர் இந்த நிபுணர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.

You May Also Like

About the Author: kalaikkathir