உச்சம் தொட்ட தங்கத்தின் விலை!

இலங்கையில் தங்கத்தின் விலை இன்றைய (15) தினம் 5,000 ரூபாயால் உயர்ந்துள்ளதாக சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.

அதன்படி, இன்று (15) காலை கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தையில் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 342,300 ரூபாயாக உயர்ந்துள்ளது.

நேற்றை தினம் 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 337,600 ரூபாயாக காணப்பட்டது.

இதற்கிடையில், நேற்று (14) 365,000 ரூபாயாக இருந்த கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை, இன்று (15) 370,000 ரூபாயாக உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்கச் சந்தை தரவுகள் மேலும் தெரிவிக்கின்றன.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply