கிளிநொச்சி மாவட்டம், கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவில் பரந்தன் பகுதியில் இராணுவத்தினர் வசமிருந்த தனியாருக்கு சொந்தமான 1.5 ஏக்கர் காணி இன்று விடுவிக்கப்பட்டுள்ளது.
விடுவிக்கப்பட்ட காணியின் ஆவணத்தை கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரனிடம், மாவட்ட செயலகத்தில் வைத்து இராணுவத்தினர் இன்று கையளித்திருந்தனர்.
