காலி, சீனி கம, தெல்வல பிரதேசத்தில் 3 கிலோவுக்கும் அதிகமான ஹெரோயினுடன் மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இராணுவப் புலனாய்வு அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட நடவடிக்கைப் பிரிவின் அதிகாரிகளுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இன்று (08) முற்பகல் இந்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
