புவிச்சரிதவியல் அளவை மற்றும் சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவர் அநுர வல்பொல இன்று (17) காலை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சட்டவிரோத ஆட்சேர்ப்பு தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டு இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதான நபர் இன்று பிற்பகல் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.
