மாவீரர் தினத்தில் யாழில் அதிகரிக்கும் பொலிஸாரின் கெடுபிடிகள்!

மாவீரர் தினம் நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் யாழில் அதற்கான ஏற்பாடுகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் இதன்போது பொலிஸாரின் சில கெடுபிடி சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது.

மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கும் வகையில் வல்வெட்டித்துறை பகுதியில் நேற்று சோடனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது வல்வெட்டித்துறை பொலிஸார் சோதனையில் ஈடுபட்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

சிலரின் சிவில் உடை படங்களுடன் வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட பதாகையை அகற்ற சொன்ன வல்வெட்டித்துறை பொலிஸார் சிலரிடம் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.

தடை செய்யப்பட்ட அமைப்புக்களின் சின்னங்கள், இலட்சிணைகள் பயன்படுத்தாமல் உயிரிழந்தவர்களை நினைவு கூர முடியும் என அரசாங்கம் அறிவித்திருந்த போதும், ஆட்சி மாறியும் காட்சி மாறவில்லை என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதேவேளை நேற்று மாலை மல்லாகம் சந்தி பகுதியில் மாவீரர் நினைவேந்தல் தொடர்பில் இலத்திரனியல் உபகரணத்தில் பாடல் ஒலிக்க விடப்பட்டுள்ளது. அவ்விடத்திற்கு வந்த தெல்லிப்பழை பொலிஸார் குறித்த உபகரணத்தை கைப்பற்றி வழக்கு சான்றுப் பொருளாக இலக்கமிட்டுள்ளனர்.

மாவீரர் தினம், நாளை அனுஷ்டிக்கப்படவுள்ள நிலையில் பொலிஸாரின் கெடுபிடிகள் காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply