நாட்டில் தற்போது நிலவிவரும் சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளை மட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போதைய அனர்த்த நிலைமை நீங்கும் வரை மேல் மாகாணத்திற்குள் மட்டுமே ரயில் சேவை இயக்கப்படும் என்றும், அத்தியாவசிய சேவைகளுக்காக வருகை தரும் பணியாளர்களுக்காக காலி மற்றும் சிலாபத்திலிருந்து கொழும்பு கோட்டை வரை ஒரு சில ரயில்கள் இயக்கப்படும் என்றும் ரயில்வே பொது முகாமையாளர் ரவீந்திர பத்மப்பிரிய தெரிவித்துள்ளார்.
