அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
சண்டிலிப்பாய் – கல்லுண்டாய் பகுதியில் உள்ள ஒருவர், நேற்றையதினம் (10) அந்த பகுதி கிராம சேவையாளர் ஒருவருக்கு எதிராக முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் நிவாரண நிதி வழங்கப்படும் பட்சத்தில் அதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதிலும் அதனை நடைமுறைப்படுத்தும் அதிகாரியினால் தமது தாய் புறக்கணிக்கப்பட்டதாக கூறி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு முறைப்பாடு வழங்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பான முறைப்பாடு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் நேற்றைய தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்த நிலையில், அது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
