வாகன விபத்துச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வல நேற்று (12) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மாளிகாகந்த நீதவான், கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேரில் சென்று சந்தேகநபரை நேரில் பார்வையிட்டதன் பின்னர் அவரைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.
இதன்படி சந்தேகநபர் 02 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
மேலும் விபத்து சம்பவம் தொடர்பிலான வழக்கு எதிர்வரும் 19ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
