மட்டக்களப்பில் இன்று மின்தடை

மட்டக்களப்பில் பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக இன்று காலை 08.30 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மின்சாரம் தடைப்படவுள்ளதாக மட்டக்களப்பு பிரதேச மின் பொறியிலாளர் அலுவலகத்தினால் மின் பாவனையாளர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

இதன் கீழ் 08.09.2020 செவ்வாய்கிழமை காலை 08.30 மணிமுதல் மாலை 05.00 மணி வரை மட்டக்களப்பு பிரதேச மின் பொறியிலாளர் அலுவக பிரிவுக்குட்பட்ட இருதயபுரம் ,கொக்குவில் , பிள்ளையாரடி , ஊறணி , நாவற்கேணி , ஜெயந்திபுரம் , மாமாங்கம் ஆகிய பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பராமரிப்பு மற்றும் திருத்த வேலை காரணமாக மின்சார தடை ஏற்படவுள்ளதாக மின் பாவனையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: kalaikkathir