வெலிகம பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் லசந்த விக்கிரமசேகர கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மற்றுமொரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் வெலிகம பிரதேசத்தில் வைத்து குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொலைக்கு உடந்தையாக செயற்பட்ட குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
