வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஐந்து பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
வென்னப்புவ, மாரவில பிரதேசத்தில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் உயிரிழந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் சடலங்கள் வீடொன்றிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கவலைக்கிடமான நிலையில் இருந்த மேலும் இரண்டு பேர் வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மாரவில பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
