இப்போதைக்கு நான் பதவி விலகப்போவதில்லை ;பிரதமர்

இரண்டுவருடங்களின் பின்னர் பிரதமர் பதவியையோ நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையோ இராஜினாமா செய்யும் எண்ணம் எனக்கில்லை என பிரதமர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

மக்கள் என்னை ஐந்து வருடங்களுக்கு தெரிவு செய்துள்ளனர்,அந்த காலம் முடிவடைவதற்கு முன்னர் விலகமுடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

ஊடகங்களில் முரணான செய்திகள் வெளியாகின்ற போதிலும் இரண்டுவருடங்களின் பின்னர் விலகிச்செல்வதற்கான திட்டம் எதுவுமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: kalaikkathir