சர்வதேச ஒலிம்பிக் குழு, (IOC) இலங்கை தேசிய ஒலிம்பிக் குழுவிற்கு (NOC) அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதன்படி எதிர்வரும் ஏப்ரல் மாத இறுதிக்குள் வருடாந்த பொதுக்கூட்டத்தை நடத்துமாறு சர்வதேச ஒலிம்பிக் குழு அறிவுறுத்தியுள்ளது.
அந்தக் காலப்பகுதிக்குள் தடயவியல் கணக்காய்வு (Forensic Audit) நிறைவு செய்யப்பட்டு, அது தொடர்பான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
