திருகோணமலையில் ஏற்பட்டுள்ள மற்றுமொரு சர்ச்சை!

திருகோணமலை பொது மக்கள் அதிகளவில் பாவிக்கும் மக்ஹேய்சர் மைதானத்தில் திருகோணமலை பிக்கு ஒருவரின் தகனக் கிரியை இடம்பெறுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக சமூகவலைத்தளங்களில் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

மக்கள் அதிகம் பயன்படுத்தும் மக்ஹேய்சர் மைதானத்தில் இதை செய்ய வேண்டாமெனக் கூறியும் பிக்கு தகனக் கிரியை அடாத்தாக முன்னெடுக்கப்படுவதாக பிரதேசவாசிகள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

இந்த மனநிலை மிகவும் மோசமானது. இதை தட்டிக் கேட்க திருகோணமலையின் ஒரு அரச பாராளுமன்ற உறுப்பினர் இருக்கின்றார். ஆனால் அவரும் பெளத்த பேரினவாதத்திற்கு பயந்தே வாழ வேண்டி இருக்கின்றதாகவும் விசனம் வெளியிடப்பட்டுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply