சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டித்து பாரிய போராட்டம்!

இலங்கையின் 78ஆவது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்படும் நிலையில், இந்நாளை கரி நாளாக கருதி வடக்கு – கிழக்கில் முன்னெடுக்கப்படும் போராட்டம் கிளிநொச்சி, கந்தசுவாமி ஆலய முன்றலில் ஆரம்பமாகியுள்ளது.

தமிழர்களுக்கு இது சுதந்திர தினம் இல்லை என தெரிவித்து சுதந்திர தினத்தை கரிநாளாக அனுஷ்டிக்குமாறு யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் அழைப்பு விடுத்தது.

யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் விடுத்த அழைப்புக்கு சமூக மட்ட சிவில் அமைப்புக்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள் ஆதரவை தெரிவித்திருந்தன.

போராட்டம் தற்போது பேரணியாக கிளிநொச்சி நகரத்தை நோக்கி நகர்ந்து கொண்டு இருக்கிறது.

போராட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், தமிழ் தேசியம் சார் அரசியல் கட்சிகள், காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர், பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், சிவில் சமூக அமைப்புகள், தமிழ் தேசியவாதிகள், இளைஞர் – யுவதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டுள்ளனர்.

இதேவேளை கிளிநொச்சியில் இன்று சுதந்திர தினத்தை எதிர்ப்பு தெரிவித்து வர்த்தக நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply