நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம் எனவும், கல்வியில் அரசியலை திணிக்க கூடாது எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
‘159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது’ எனவும் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும். மறுபுறத்தில் எதிரணிகள் தமது கருத்துகளை முன்வைக்கும். எனவே ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கதைக்கப்பட்டாலும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும் என குறிப்பிட்டார்.
அத்துடன் கல்வி மறுசீரமைப்பு எனது ஆட்சிகாலத்தில்தான் ஆரம்பமானது. நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம். கல்வியில் அரசியலை திணிக்க கூடாது. கல்வி மறுசீரமைப்பென்பது பொறுப்புடன் செய்ய வேண்டிய விடயமாகும்- எனவும் மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
