இலங்கையின் புதிய கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட சமுதிகா ஜயரத்ன தேசிய கணக்காய்வு அலுவலகத்தில் இன்றையதினம் (5) தமது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.
இலங்கையின் 42ஆவது கணக்காய்வாளர் நாயகமாகப் பதவியேற்றுள்ள சமுதிகா ஜயரத்ன, இந்த பதவிக்கு தெரிவான முதல் பெண் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
சமுதிகா ஜயரத்ன வங்கி, நிதி, காப்புறுதி, வரி, திறைசேரி சேவைகள் மற்றும் கடன் முகாமைத்துவம் ஆகியவற்றில் அனுபவம் வாய்ந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
