இலங்கைப் போக்குவரத்து சபையில் முதன்முறையாக பெண் நடத்துனர்கள்!

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் (லங்கம) புதிதாக 20 பெண் நடத்துனர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.

புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20 பெண் நடத்துனர்களுக்கு நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு மாகும்புர பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தில் இன்றையதினம் (06) நடைபெற்றது.

இந்த நிகழ்வு வெகுஜன ஊடகத் துறை பிரதி அமைச்சர் கௌசல்யா ஆரியரத்ன, பாராளுமன்ற உறுப்பினர் சமன்மலி குணசிங்க மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் சஜீவ கனகரத்ன ஆகியோரின் பங்கேற்புடன் நடைபெற்றது.

இதன்போது நியமனம் பெற்ற பெண் நடத்துனர்களுக்காகப் புதிய சீருடை ஒன்றும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply