தென்னாபிரிக்கா – நியூசிலாந்து அணிகள் இன்று அரை இறுதியில் பலப்பரீட்சை!

ICC T20உலகக் கிண்ண கிரிக்​கெட் தொடரில் இன்று இரவு 7 மணிக்கு கொல்​கத்தா ஈடன் கார்​டன் மைதானத்​தில் நடை​பெறும் முதல் அரை இறுதி ஆட்டத்​தில் தென்னாபிரிக்கா – நியூசிலாந்து அணி​கள் பலப்பரீட்சை நடத்​துகின்​றன.

நடப்பு உலகக் கிண்ண தொடரில் தென் ஆப்​பிரிக்கா – நியூசிலாந்து அணிகள் 2-வது முறை​யாக மோத உள்​ளன. இந்த இரு அணி​களும் லீக் சுற்​றில் மோதி இருந்​தன. இதில் 176 ஓட்டங்கள் இலக்கை துரத்​தி​யிருந்த தென் ஆப்​பிரிக்க அணி 17 பந்​துகளை மீதம் வைத்து 7 விக்​கெட்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி கண்​டிருந்​தது.

இன்​றைய ஆட்​டத்​தில் வெற்றி பெறும் அணி 8-ம் தேதி நடை​பெறும் இறு​திப் போட்​டிக்கு முன்​னேறும் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply