சவுதி அரேபியாவிலுள்ள CIA மையம் மீது ட்ரோன் தாக்குதல்!

சவுதி அரேபியாவிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தின் மத்திய புலனாய்வு முகவரக (CIA) மையம் ஒன்றின் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரியாத்தில் உள்ள தூதரக வளாகத்தின் மீது இரண்டு ட்ரோன்கள் தாக்குதல் நடத்தியதை அமெரிக்காவும் சவுதி அரேபியாவும் உறுதிப்படுத்தியுள்ள போதிலும், இத்தாக்குதலின் இலக்கு CIA மையமா என்பது குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

இந்தத் தாக்குதலினால் தூதரகத்தின் கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளதோடு, உட்பகுதி புகையினால் சூழப்பட்டுள்ளதாக அந்த செய்திச் சேவை மேலும் குறிப்பிட்டுள்ளது.

தூதரகத்திற்கு சேதம் ஏற்பட்டுள்ள போதிலும், அங்கிருக்கும் பணியாளர்களை அதே இடத்தில் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply