குவைத் கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் அருகே பாரிய வெடிப்பு- எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிப்பு!

குவைத் கடற்கரைக்கு அப்பால் உள்ள கடற்பரப்பில் எண்ணெய் தாங்கிக் கப்பல் ஒன்றின் அருகே பாரிய வெடிப்புச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய இராச்சியத்தின் கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

குவைத்தின் முபாரக் அல் கபீர் பகுதியிலிருந்து தென்கிழக்காக 30 கடல் மைல் தொலைவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த எண்ணெய் கசிவு காரணமாகச் சுற்றுச்சூழல் பாதிப்புகள் ஏற்படக்கூடும் எனவும், வெடிப்புச் சம்பவத்துடன் எவ்வித தீ விபத்துக்களும் பதிவாகவில்லை எனவும் UKMTO குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த கப்பலின் பணியாளர்கள் பாதுகாப்பாக உள்ளதாக அந்த அமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply