ஈரான் தலைவர் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில்!

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஈரான் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காக இன்று (05) காலை ஈரான் தூதரகத்திற்குச் சென்றிருந்தார்.

ஈரான் தலைவரின் மறைவுக்கு அனுதாபம் தெரிவிப்பதற்காகக் கொழும்பில் உள்ள ஈரான் தூதரகத்தில் தற்போது விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அங்கு சென்ற முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, அங்கு வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் தனது அனுதாபச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அதன்பின்னர் தூதரக அதிகாரிகளைச் சந்தித்த அவர், தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply