நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிப்பு!

நாட்டில் எரிவாயு விலை உயர்வு காரணமாக இன்று (11) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் சில உணவு வகைகளின் விலைகள் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்படும் என அகில இலங்கை உணவகம் மற்றும் உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

வளைகுடா போர் பதற்றத்தால் உலகில் எரிவாயு மற்றும் எரிபொருள் விலை அதிகரித்துள்ள நிலையில், இலங்கையில் விலை மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply