FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது- அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு!

இந்த ஆண்டு நடைபெறவுள்ள FIFA உலகக்கிண்ணப் கால்பந்து தொடரில் ஈரான் அணி பங்கேற்காது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவினால் ஈரானின் உயரிய தலைவர் அயதுல்லா அலி காமேனி படுகொலை செய்யப்பட்டதைக் கண்டிக்கும் வகையில், தமது கால்பந்து அணி இம்முறை உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்காது என ஈரானிய விளையாட்டுத்துறை அமைச்சர் அகமது டோன்யாமாலி தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜூன் மாதம் அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோ ஆகிய நாடுகளின் இணை அனுசரணையுடன் உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் ஆரம்பமாகவுள்ளன.

இதேவேளை, 2026 FIFA உலகக்கிண்ணப் போட்டித் திட்டங்கள் கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட போது, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிற்கு ‘FIFA சமாதான விருது’ வழங்கப்பட்டது. “சமாதானத்திற்காக தனித்துவமான மற்றும் அசாதாரண நடவடிக்கைகளை எடுத்தவர்” மற்றும் “உலக மக்களை ஒன்றிணைத்தவர்” என்ற கௌரவத்தின் அடிப்படையில் அவருக்கு இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply