சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) துணைத்தலைவராக ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiram Chandrelegar) அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுள்ளார்.
ஜெனிவா மாநிலத்தில் பிறந்த ஈழத்தமிழரான மருத்துவர் அபிராம், தனது கடின உழைப்பாலும் திறமையாலும் சுவிஸ் இராணுவத்தின் உயரிய பொறுப்புகளில் ஒன்றை எட்டியுள்ளார்.
2025ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய நிர்வாகக் குழுவில், லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் தலைவராகவும், லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் துணைத்தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சுவிற்சர்லாந்து இராணுவத்தின் மிக முக்கியமான அமைப்பான சுவிஸ் இராணுவ மருத்துவர்கள் சங்கத்தின் (ASMD) புதிய துணைத்தலைவராக, ஈழத்தமிழ் பின்புலத்தைக் கொண்ட லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் (Lt. Abiraam Chandrelegar) நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து, சுவிட்சர்லாந்தின் சுக் (Zug) நகரில் அந்நாட்டு இராணுவத் தலைவர் மற்றும் உயர்மட்ட அதிகாரிகளுடனான விசேட சந்திப்பு ஒன்று அண்மையில் வெற்றிகரமாக நடைபெற்றதாக சுவிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த ஆண்டு உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்ட ASMD அமைப்பின் சார்பில், அதன் புதிய தலைவரான லெப்டினன்ட் டேவிட் எம். வி. க்ரீமர் (Lt. David M. V. Kremer) மற்றும் துணைத்தலைவர் லெப்டினன்ட் அபிராம் சந்திரேலகர் ஆகிய இருவரும் முதல்முறையாக இராணுவத் தலைமையுடன் உத்தியோகபூர்வக் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்வில் சுவிஸ் கூட்டாட்சி கவுன்சிலர் மார்ட்டின் பிஃபிஸ்டர் (Martin Pfister) மற்றும் சுவிஸ் இராணுவத் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் பெனடிக்ட் ரூஸ் (Lt. Gen. Thomas Süssli / Benedict Roos) ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போதைய உலகளாவிய பாதுகாப்புக் கொள்கை சவால்கள், எதிர்கால அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில் சுவிஸ் இராணுவத்தின் தயார்நிலை மற்றும் மருத்துவப் பிரிவின் வகிபாகம் குறித்து இங்கு விரிவாக ஆராயப்பட்டது.
தமிழர் அடையாளம் உலக அரங்கில் இராணுவக் கட்டமைப்பு மற்றும் மருத்துவத் துறையில் சுவிட்சர்லாந்து போன்ற ஒரு நாடு வழங்கும் இந்த அங்கீகாரம், இளைய தலைமுறை தமிழர்களுக்குப் பெரும் ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது.
ஒரு ஈழத்தமிழ் மருத்துவர் சுவிஸ் இராணுவ அதிகாரிகளுடன் இணைந்து அந்நாட்டின் பாதுகாப்புக் கொள்கைகளை முன்னெடுப்பது என்பது சாதாரணமான ஒன்றல்ல.
ஈழத்தை பின்புலமாக கொண்ட இளைஞனின் இந்த சாதனை புலம் பெயர் மக்களுக்கு மட்டுமல்லாது இலங்கை வாழ் தமிழர்களுக்கும் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலரும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் கூறி வருகின்றனர்.
