ஜனாதிபதி அநுர தலைமையில் கூடியது பொருளாதார கண்காணிப்புக் குழு!

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் பொருளாதார கண்காணிப்புக் குழு நேற்று (12) கூடியுள்ளது.

வெளிப்புற அழுத்தங்களுக்கு மத்தியில் இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையைப் பாதுகாப்பதற்கும், பிரஜைகளின் நலனை உறுதி செய்வதற்கும் குறித்த பொருளாதார கண்காணிப்புக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.

இதன்போது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழல் காரணமாக உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு, கப்பல் போக்குவரத்தில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் சர்வதேச வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் காரணமாக இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் இந்நாட்டு சந்தை நிலைமையை ஸ்தீரப்படுத்தல் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பிற்கு மேற்கொள்ள வேண்டிய துரித நடவடிக்கை குறித்தும் இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply