எரிபொருள் அனுமதிப் பத்திரம் (QR குறியீடு) இன்றி விவசாயிகளுக்கு எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விவசாய அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதன்படி விவசாயிகளுக்கு அறுவடை பணிகளுக்காக ஏக்கர் ஒன்றுக்கு 15 லீட்டர் எரிபொருளும், நிலம் உழுது தயார்படுத்தல் பணிகளுக்காக ஏக்கருக்கு 20 லீட்டர் எரிபொருளும் QR குறியீடு இன்றி வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
