சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ மாற்றவோ கூடாது – வனவிலங்கு துறை

மத்திய மலையகத்தின் புதர் காடுகளில் காணப்படும் சிறுத்தை குட்டிகளின் இருப்பிடத்தில் தலையிடவோ அல்லது அவற்றின் இருப்பிடங்களை மாற்றவோ வேண்டாம் என வனஜீவராசிகள் திணைக்களம் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், உணவு தேடிச் செல்லும் சிறுத்தைப்புலிகள் தங்கள் குட்டிகளை தாம் திரும்பி வரும் வரை பேருந்துகளுக்கு அடியில் மறைத்து வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளது.

சிறுத்தைப்புலிக்கு அருகில் அடிக்கடி சென்றால், ஏதேனும் ஆபத்து நேரிடலாம் என எச்சரித்த அதிகாரி, குட்டிகளை நெருக்கமாக புகைப்படம் எடுக்க வேண்டாம் எனவும் அறிவுறுத்தினார்.

குட்டிகளை எடுத்து கைகளால் கையாளமல் தனியாக விட்டுவிட்டு அங்கிருந்து செல்லுமாறு அவர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்ததோடு, மனிதர்கள் கையாண்ட பிறகு குட்டிகளை எடுத்துச் செல்ல சிறுத்தை மறுக்கும் எனவும் தெரிவித்தார்.

குட்டிகளைக் கண்டால், திணைக்களத்தின் அவசர தொலைபேசி இலக்கமான 1992 அல்லது அருகிலுள்ள வனவிலங்கு பாதுகாப்பு அலுவலகத்திற்கு உடனடியாகத் தெரிவிக்குமாறு அவர் பொதுமக்களைக் கேட்டுக்கொண்டார்.

You May Also Like

About the Author: kalaikkathir

Leave a Reply