சந்தேகநபர்களுக்கு விஷம் கொடுத்த குற்றச்சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி நீக்கம்!

அடுருப்பு வீதி பொலிஸ் நிலைய தடுப்புக் காவலில் இருந்த 2 சந்தேக நபர்களுக்கு விஷம் கொடுத்ததாகக் கூறப்பட்ட குற்றச்சாட்டின் பேரில் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

பார்வையாளர் ஒருவர் கொடுத்த பாலினை குடித்ததால் குறித்த இரு சந்தேகநபர்களுக்கும் உடல்நலக்குறைவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த சந்தேகநபர்கள் அண்மையில் ஜிந்துபிட்டியவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஜனவரி 25ஆம் திகதி ஜிந்துபிட்டியவில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் இளைஞர் ஒருவர் காயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவனது கூட்டாளியைப் பிடித்தபோது துப்பாக்கிதாரி குற்றம் நடந்த இடத்தில் இருந்து தப்பிவிட்டார். தப்பியோடிய துப்பாக்கிதாரி பின்னர் தம்பனையில் வைத்து கைது செய்யப்பட்டு அடுருப்பு வீதி பொலிஸ் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார்.

பின்னர், துப்பாக்கிச் சூட்டுக்கு உதவியதற்காக மற்றொரு சந்தேக நபரும் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட துப்பாக்கிதாரியும் மூன்றாவது சந்தேக நபரும் அடுருப்பு வீதி பொலிஸ் நிலையத்தில் ஒரே அறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரியின் காதலி நேற்று காலை அவர்களை பொலிஸ் நிலையத்தில் சந்தித்துள்ளார், அதைத் தொடர்ந்து மற்றொரு பார்வையாளர் அவர்களுக்கு இரண்டு பன்களையும் ஒரு பால் பாக்கெட்டையும் கொடுத்துள்ளார்.

பாலினை உட்கொண்ட பிறகு இருவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதனால், அவர்கள் வைத்திய சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை, பால் பாக்கெட்டில் விஷம் கலந்திருந்ததாக பொலிஸார் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

இதன்படி, குறித்த வருகையாளரின் அடையாளம் இன்னும் கண்டறியப்படாத நிலையில் அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply