தனிமைப்படுத்தல் முகாமில் இருந்து மற்றுமொரு குழு வெளியேற்றம்.

இரணைமடு கொரோனா தடுப்பு முகாமில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்த மற்றுமொரு குழுவினர் இன்று வெளியேறினர்.

172 பேர் கொண்ட குழுவினரே இவ்வாறு வெளியேறி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை பூச்ச இராணுவ முகாமில் தனிமைப்படுத்தலுக்கு உட்பட்டிருந்த இரண்டாவது குழுவும் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

அதற்கமைய 6 இலங்கையர்கள் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளை நிறைவு செய்து நேற்று (03) அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இவர்களுக்கான தனிமைப்படுத்தல் செயற்பாட்டை வெற்றிகரமாக நிறைவு செய்தமைக்கான சான்றிதழை இலங்கை கடற்படையின் கட்டளை அதிகாரி கையளித்தார்.

இங்கு இதுவரை சுமார் 11 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாடுகளை நிறைவு செய்து வெளியேறியுள்ளதுடன் மேலும் 66 பேர் தனிமைப்படுத்தல் செயற்பாட்டுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

கடற்படையால் பல்வேறு தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.

You May Also Like

About the Author: Kathiradmin