மறைந்திருந்த கொரோனா தொற்றுள்ள பெண்ணுக்கு பிரசவம் சிசுவும் ,தாயும் தனிமைப்படுத்தப்பட்டனர்.

 

களுத்துறை மாவட்டம், பேருவளை – பன்னில பகுதியில் கொரோனா வைரஸ் தொற்றாளர்கள் இனங்காணப்பட்ட பிரதேசத்தில் மறைந்திருந்த 28 வயதுடைய கர்ப்பிணி, களுத்துறை- நாகொட வைத்தியசாலையில், இன்று சிசுவைப் பிரசவித்துள்ளார்.

இந்தத் தகவலை பேருவளை சுகாதார வைத்திய அதிகாரி வருண செனவிரத்ன தெரிவித்தார்.

குறித்த பெண்ணின் இரத்த மாதிரியை சோதனை செய்தபோது, அப்பெண்ணுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தநிலையில், குறித்த பெண் பிரசவித்த சிசுவின் நிலை குறித்து வைத்தியர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதுடன், தாயையும் சிசுவையும் தனிமைப்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்து, பேருவளையில் இதுவரை இனங்காணப்பட்ட கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 13ஆக அதிகரித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Kathiradmin