நாட்டுக்குள் வரும் விமான பயணிகளுக்கு தொற்ரு நீக்க கட்டுநாயக்க விமான நிலையத்தில் அமைக்கப்பட போகிறது சுரங்கப்பாதை!

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 20 அடி நீளமான சுரங்க பாதை அமைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக விமான நிலையத்தின் தலைவர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள அவர்,

“ கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக நாட்டுக்குள் வரும் அனைத்து விமான பயணிகளும் 20 அடி நீளமான சுரங்க பாதை வழியாக அழைத்து வந்து, முற்றாக நுண்ணுயிர் தொற்று நீக்கும் மருந்து தெளித்து சுத்தப்படுத்திய பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

இப்படியான நடவடிக்கையின் போது, தவறுதலாக எந்த பயணியும் விடுப்பட மாட்டார். அனைத்து நுண்ணுயிர்களை அழிக்கக் கூடிய நாசனிகள் இந்த சுரங்க பாதையில் பயன்படுத்தப்படும்.

விமானப் படையினரின் உதவியுடன் இந்த சுரங்க பாதையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நிலைய ஊழியர்கள் உட்பட அனைவரும் இந்த சுரங்க பாதை வழியாக நுண்ணுயிர் தொற்று நீக்கலுக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்றார்.

You May Also Like

About the Author: Kathiradmin