
யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்குள் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பிள்ளையார் ஆலயத்தில் கும்பாபிஷேகத்துடன் மூல மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு விசேட வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
பிறந்துள்ள சோபகிருது வருடத்தின் முதல் நாளில் சிறைப்பட்டு இருக்கும் காலத்தில் கூட இந்து மதக் கைதிகள் தங்கள் இறை வழிபாடுகளை தடையின்றி மேற்கொள்ளும் நோக்கில் இந்த ஆலயம் உருவாக்கப்பட்டுள்ளது.
லண்டனைச் சேர்ந்த தொழிலதிபர் சி.அமரசிங்கத்தின் முழுமையான நிதிப்பங்களிப்புடன் இந்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.
யாழ் கதிரேசன் கோவிலின் பிரதம குரு பாலசுதர்சன் சிவாச்சாரியார் கும்பாபிஷேக ஆராதனைகளை மேற்கொண்டிருந்தார். இந்த நிகழ்வில் சிறைச்சாலை அத்தியட்சகர் கே.பி.ஏ.உதயகுமார, சிறைச்சாலை உத்தியோகத்தர்கள் உட்படப் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.