இலங்கையில் முதல்முறையாக யாழ் மாவட்டத்தில் பெரியளவிலான கரப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கரப்பந்தாட்டச் சுற்றுப் போட்டி இரண்டாவது முறையாக இடம்பெறவுள்ளது.

இலங்கையிலே யாழ் மாவட்டத்தில்தான் முதல்முறையாக பெரிய அளவில் குறித்த போட்டித் தொடர் நடைபெறவுள்ளதாக யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ந.செந்தூரன் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள ஒன்பது பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்கள் இந்தத் தொடரில் பங்குபற்ற உள்ளதாகவும், இதன் பிரதான நோக்கம் கழகங்களில் உள்ள சிறந்த வீரர்களை இந்தத் தொடரில் ஈடுபடுத்தி அடையாளம் காண்பதெனவும் அவர் கூறினார்.

பாடசாலை ரீதியாக தேசிய மட்டத்தில் பங்கு பற்றி வெற்றி பெற்ற, தோல்வியடைந்த என அனைத்து அணிகளையும் இணைத்து, அவர்களது ஆற்றலை வெளிக் கொண்டுவரும் நிகழ்வாக இந்தத் தொடர் இடம்பெற எதிர்பார்த்திருப்பதாகவும், பெண்கள் அணிகளும் இந்தத் தொடரில் இணைய வேண்டுமென விரும்புவதாகவும் யாழ் மாவட்ட கரப்பந்தாட்டச் சங்கத் தலைவர் ந.செந்தூரன் தெரிவித்திருக்கிறார்.

You May Also Like

About the Author: digital