
தமிழ் மக்களுக்கும் எனக்கும் உண்மையான ஹீரோ பிரபாகரன் தான் என பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் தான் ஆணித்தரமாக தெரிவித்திருந்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ள்ஸ் நிர்மலநாதன் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மகிந்த ராஜபக்சவிடம் இது தொடர்பில் தான் ஆணித்தரமாகவும் நேரடியாகவும் எடுத்துச் சொன்னதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஊடகங்களுக்கு அவர் வழங்கிய செவ்வியிலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.