இலங்கை மின்சார சபையின் தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, நாடளாவிய ரீதியில் 12,000 இற்கும் அதிகமான மின்சாரத் தடைகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி நேற்று (10) பிற்பகல் மற்றும் இரவு வேளைகளில் கம்பஹா, களுத்துறை, இரத்தினபுரி, பேருவளை, புத்தளம் மற்றும் அனுராதபுரம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் மின்சாரத் தடைகள் ஏற்பட்டுள்ளன.
