ஜனவரி முதல் தனியார் பேருந்துகளுக்கான மாசு சோதனையைத் தவிர்க்க நடவடிக்கை! 

அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் முதல் அனைத்து தனியார் பேருந்துகளுக்கும் புகை மாசு சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என இலங்கை  தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம்  வலியுறுத்தியுள்ளது.

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன, மாசு உமிழ்வு பரிசோதனைக்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாத நிலையில் இந்த தீர்மானத்திற்கு வந்துள்ளதாகவும், இது தொடர்பில் போக்குவரத்து அதிகாரிகளுக்கு எழுத்து மூலம் அறிவிக்க அடுத்த வாரத்திற்குள் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தனியார் பேருந்துகளில் மாசு உமிழ்வு சோதனை தொடர்பான கடுமையான நெருக்கடி உள்ளது. எனவே, இது நடைமுறையில் மேற்கொள்ளப்படாததால், ஜனவரி மாதம் முதல் இந்த மாசுப் பரீட்சையை தவிர்ப்பதற்கு தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளோம் என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, பேருந்துகளுக்கு  வழங்கப்படும் எரிபொருளின் தரத்தில் பாரிய பிரச்சினை காணப்படுவதாகவும் விஜேரத்ன குற்றம் சுமத்தியுள்ளார்.

இதேவேளை, இலங்கை போக்குவரத்து சபையில்  இணைக்கப்பட்டுள்ள பேருந்துகளுக்கோ அல்லது வேறு எந்த அரசாங்க வாகனங்களுக்கோ மாசு உமிழ்வு பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவதில்லை என இலங்கை  தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் மேலும்  வலியுறுத்தினார்.

எனவே, ஜனவரி முதல் எங்கள் பேருந்துகளுக்கான உமிழ்வு சோதனையை நாங்கள் தவிர்ப்போம் என்று போக்குவரத்து அமைச்சகத்திற்கு எழுத்துப்பூர்வ அறிவிப்பை அடுத்த வாரம் வழங்குவோம் என விஜேரத்ன இதன்போது உறுதியளித்தார்.

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply