நாட்டின் பல்வேறு இடங்களிலும் அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நினைவுநாள்!

மாவீரர் நினைவுநாளை முன்னிட்டு வடக்கு கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றையதினம் உணர்வெழுச்சியுடன் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

யாழ்ப்பாணம் கோப்பாய்  மாவீரர் துயிலும் இல்லம்  இராணுவ கட்டுப்பாட்டில் இருக்கும் நிலையில் துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள காணி ஒன்றில் மாவீரர்களுக்கான நினைவஞ்சலி செய்யப்பட்டதுடன் யாழ்ப்பாணம் கொடிகாமம் மாவீரர் துயிலுமில்லத்தில் மாவீரர் தின நிகழ்வுகளும் நேற்று முன்னெடுக்கப்பட்டன.

இதேவேளை, அகவணக்கத்தைத் தொடர்ந்து ஈகைச் சுடரை மாவீரர்களான கப்டன் ரசியன், மேஜர் ரெஸ்ரார்,மேஜர் வண்ணன் ஆகியோரின் தாயாரும் மற்றும் மாவீரர் குமரர் மற்றும் சந்திரன் ஆகியோரின் சகோதரியும் ஏற்றி நினைவேந்தலை ஆரம்பித்து வைத்தனர்.

அதனைத் தொடர்ந்து மாவீரர்களின் உறவுகள் மற்றும் பொதுமக்களால் பொதுச்சுடர்கள் ஏற்றி வைக்கப்பட்டன.

மாவீரர்களின் பெற்றோர், சகோதரர்கள்,உறவுகள், சமூக ஆர்வலர்கள், அரசியல் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் எனப் பெருந்திரளானவர்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

You May Also Like

About the Author: Chaithannya Dhanu

Leave a Reply